இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 24 அக்டோபர், 2013

நீ அசையும் திசையெல்லாம் அசைகிறேன்....!!!

காதல் ஒன்றுதான்
புரிந்து கொண்டாலும்
அழகு -பிரிந்து சென்றாலும்
அழகு -வலிகள் தான்
வேறுபடும் காதல் வேறுபடாது ....!!!

உன்னை என்று பார்த்தேனோ
அன்று நான் இறைவனிடம்
கேட்ட வரம் உன்னை எனக்கு
தா என்று அல்ல ...?
உன்னை தவிர யாரையும்
தந்துவிடாதே என்று ....!!!

உன் காந்த கண்ணில்
பட்டு துடிக்கும் இரும்பு
கண் நான் -நீ அசையும்
திசையெல்லாம் அசைகிறேன்....!!!