இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 29 அக்டோபர், 2013

நான் கண்ட பார்த்த சாரதி

வாழ்க்கையின் பயணத்துக்கு
இறைவன் பார்த்த சாரதி
சாரதியாய் இருக்கிறார்
என்பது அவரவர் நம்பிக்கை ...!!!

நாளாந்த பிழைப்புக்காய்
நாம் பயணிக்கும் வாகன சாரதி
கண்கண்ட சாரதி ...
இயந்திரத்தின் வெப்பத்தை
தன் அடியில் தாங்கி
வீதியோரம் வரும் தூசியை
விரும்பாமல் கண்ணில் வாங்கி
முறையற்ற முறையில் வீதியில்
பயணிக்கும் பயணிகளின்
துன்பத்தை தன் இதயத்தில்  
ஏற்று -எம் பயணம் வரை
எம் உயிரை பாதுகாக்கும்
வாகன சாரதிதான் -நான்
கண்ட பார்த்த சாரதி