இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 25 அக்டோபர், 2013

உன்னிடம் என் இதயம் ....!!!

நினைவுகளுடன் என்னை
போராடவிட்டு -நீ எப்படி
நிம்மதியாய் இருக்கிறாய் ...?

நான் உயிரோடு இருக்கும்
காலம் வரை உன் உயிராக
இருக்கும் காதல் வரத்தை
தந்துவிடுவாயா அன்பே ...?

உன்னை எல்லோருக்கும்
பிடிக்கிறது அதுதான் எனக்கு
பயமாக இருக்கிறது -என்றாலும்
நான் கொடுத்து வைத்தவன்
உன்னிடம் என் இதயம் ....!!!