இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 20 பிப்ரவரி, 2014

சுகத்தை தொலைத்து விட்டேன் ....!!!

எல்லோரையும் பார்த்து
இரங்கும் குணம் -என்னை
பார்த்து ஏன் இரங்கவில்லை
காதல் உனக்கு கல்லறை
பூவோ ...?

உள் மூச்சாக இருந்த
உன் சுவாசம் இப்போ
வெளிமூச்சாக மாறி
வருகிறது - நீ வெளியேறு
நான் காத்திருப்பேன்

காதல் சூரியன் போல்
தூரத்தில் நின்றால் சுகம்
நான் தூரத்தில் நின்று
சுகத்தை தொலைத்து
விட்டேன் ....!!!

கஸல் 644

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக