இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

இப்படி வாழ்ந்தால் வெற்றிதான் ...!!!

அதிகாலையில் துயில் எழுந்து
அகமுகத்துடன் ஆரம்பித்தால்
அகத்தில் ஆண்டவன் குடியிருப்பான்

ஆலயம் செல்ல தேவையில்லை
ஆலயமாக வீட்டை நோக்கினால்
ஆனந்தம் பெருகும் வாழ்வில்

இல்லறம் என்பது என்றும்
இன்பமாய் வாழ்வதற்கே
இதை உணர்ந்தால் உனக்கு வெற்றி

ஈசன் பாதம் நினைத்திடு
ஈகை பண்பை வளர்த்திடு
ஈரேழு ஜென்மமும் இன்பமே

உண்டியை அளவோடு உண்
உழைப்பையும் அளவோடு செய்
உயிராற்றல் வழுவாய் பெருகும்

ஊர் வம்பு பேசாமல்
ஊன் உண்பதை தவிர்த்தால்
ஊர் போற்றும் அரசன் நீ

எறும்பு போல் உழைத்திடு
எடுத்தெறிந்து பேசாதே
என்றும் இனிமையாக வாழ்வாய்

ஏர்பிடித்தவன் இறைவன்
ஏகாந்தம் பேசியே காலத்தை கழிக்காதே
ஏன் பிறந்தோம் என்று நினைக்காதே

ஐம்பொறியை  அடக்கு
ஐம் பூதங்களை மதி
ஐயம் இன்றி வாழ்வாய்

ஒற்றுமையோடு உறவாடு
ஒன்று பட்டு உழைத்திடு
ஒரு நாள் நீ அரசன்

ஓர்மம் கொண்டு உழைத்திடு
ஓதுவதை தொடர்ந்திடு
ஓர் இனமே வாழ்ந்திடு

ஔவை சொன்னதை கேள்
ஔடதம் இன்றி வாழ்ந்திருவாய்
அஃதே நீடூடி வாழ்வாய் .....!!!