இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 27 நவம்பர், 2020

கவிதை 360 காதல் வெண்பா

 13) காதல் வெண்பா 

..... 


இனியவன் காதல் வெண்பா


.....

எங்கே வருகிறாய் ஏங்கி துடிக்குது - இதயம் 

அங்கேயே சுழன்று தெரியுது மனசு -நீ 

பூவுக்குள் உதயமாகியவள் - நீ அனுமதித்தால் 

பூ மாலையாக மாற துடிக்கிறேன் ....!!!. 


....


அன்ன நடை நடந்து என்னை கொன்றவளே 

அன்னம் தண்ணியில்லாமல் தவிக்க வைத்தவளே 

உள்ளம் ஒரு காதல் கோயிலடி - அதில் நீ 

உள்ளிருக்கும் கருவறை தெய்வமடி....!!! 


.....


சொல்லாமல் கொள்ளாமல் இதயத்தில் நுழைந்து 

கொல்லாமல் கொல்லுகிறாய் விடலை என்னை 

சித்தியை துணைக்கு அழைத்துவந்து -இதயத்தை 

சித்தரவதை முகாம் ஆக்கி விட்டாய் .....!!! 


....


விழி அழகி என்று நீ பெயர் கொண்டதாலோ 

விழி மூடாமல் என்னை செய்து விட்டாய் 

தெருவெங்கும் நிற்கும் மாந்தரெல்லாம் -உன் 

திருமுகமாய் தெரிய என்ன செய்தாய் ...? 


....


காலமெல்லாம் காத்திருப்பேன் உனக்காக 

காலனிடம் கெஞ்சி கேட்பேன் என் ஆயுளை 

மாதவம் செய்தேனும் உனை அடைவேன் -அன்றேல் 

மாண்டு விடுவேன் உன் காலடியில் மண்ணிட்டு...!!! 


கவி நாட்டியரசர் இனியவன் 

காதல் வெண்பா

.... 


முதல் அடியின் ஓசை இரண்டாம் அடியிலும் வரவேண்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக