இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 26 நவம்பர், 2020

தலை நிமிர்ந்து வாழ்கிறோம்

 வித்து.... 

விதைக்கப்பட்டு.. 

மரமாகிறது..... !


மரத்தின் இலைகள்.... 

புதைக்கப்பட்டு.... 

உரமாகிறது.... !


விதைத்தாலும்... 

புதைத்தாலும்.... 

பயன் இருக்கிறது.... !


நம் மண்ணில்..... 

உடலங்கள்... 

இலட்சக்கணக்கில்..... 

புதைக்கப்பட்டன.... 

ஆயிரக்கணக்கில்... 

விதைக்கப்பட்டன...!


புதைத்ததால் நம்.. 

இனத்தை உலகறிந்தது... !


விதைத்ததால் நாம்... 

தலைநிமிர்ந்து... 

வாழ்கிறோம்..... !!!


@

கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக