இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 நவம்பர், 2020

ஆழ்மனம்

 எங்கே போகிறாய்.... 

என்று கேட்டது... 

ஆழ்மனம்...... !

 

தெரியாமல்..... 

தத்தளிக்கிறேன்.... 

என்றது சுழல்மனம்..... !

 

என்னோடு வா.... 

என்றது ஆழ்மனம்...... !

 

உன்னோடு வரமாட்டேன்..

என்றது சுழல்மனம்..... !

 

என்னோடு இணைவதே.. 

உன் பிறப்பின் நோக்கம் 

என்றது ஆழ்மனம்.... !

 

உன்னோடு வந்தால்.. 

என்னை சித்தனாக்கி... 

விடுவாய் என்றது... 

சுழல் மனம்..... !

 

அதனால் என்ன..? 

என்றது ஆழ்மனம்... !

அதற்கு வயது இருக்கிறது என்றது... 

சுழல்மனம்.... !

 

சிரித்து கொண்டே... 

அடங்கியது.... 

ஆழ்மனம்...... !!!

@

கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக