இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 19 மே, 2015

நான் சொல்லும் தீர்ப்பு ....!!!

கொடுமை கொடுமை ....
காட்டுமிறான்டிகளின்
உச்ச கட்ட கொடுமை ....
ஈழத்தமிழிச்சிகள் தொடர்ந்து ...
கொடூரமாய் கொல்லப்படும்...
கொடூர கொடுமை ......!!!


அந்நிய
படையின் ஆதிக்கத்தில் ...
கற்பிழந்த ஈழச்சிகள் .....!
ஆக்கிரமிப்பு படையின் வெறியில் ...
செம்மணி வெளியில் ....
வேம்படி மாணவி ....!!!
வெறி நாய்களிடம் அகப்பட்ட ...
வெள்ளை முயல்போல் ....
புங்குடுதீவில் வித்தியாவின் ....
கொடூர கொலை ...!!!


நான் சொல்லும் தீர்ப்பு ....!!!


வெறிகொண்ட ....
காட்டுமிறாண்டிகளை....
உடன் கொல்ல கூடாது ....
அணுவணுவாய் அனுபவித்து ....
சாகவேண்டும் .....!!!


இவர்கள் பெற்றெடுத்த பெண் ....
குழந்தைகளை இவர்களிடம் இருந்து .....
பாதுகாக்க வேண்டும் ....!!!
இல்லாவிட்டால் பெற்ற பிள்ளைகளுக்கே ....
இவர்களிடமிருந்து பாதுகாப்பில்லை .....!!!


பெண் குழந்தை இருந்தால் ...
இந்த காட்டு மிறாண்டிகளின் முகத்தில் ...
காறி துப்பி நீ எனக்கு தந்தையே இல்லை ...
என்று தந்தை உறவை பறிக்க வேண்டும் ....!!!
சகோதரிகள் இருந்தால் சகோதர உறவை
பறிக்க வேண்டும் ......!!!
தாய் உயிருடன் இருந்தால் மகன் உறவை ...
பறிக்க வேண்டும் ....!!!


சட்டத்தால் இவர்களை தண்டிப்பதை விட ...
உறவுகளால் இவர்கள் தண்டிக்க படவேண்டும் ...
நடைபிணமாய் இவர்கள் அணுவணுவாய் ...
சாக வேண்டும் .....!!!


இவர்களை காப்பாற்ற முனையும் ....
சட்டத்தரணிகளின் உரிமையை ...
பறிக்கவேண்டும் .இல்லையேல் ....
இவர்களையும் கயவரின் பட்டியலில் ....
சேர்த்து அவர்களுக்கான தண்டனையை ...
இவர்களுக்கும் கொடுக்க வேண்டும் .....
இவர்களை காப்பாற்ற நினைக்கும் ...
ஒவ்வொருவனும் தமிழின துரோகி ....!!!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக