இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 19 மே, 2015

வலிக்குதடா இப்போ இதயம் .....!!!

உரிமைக்காக போராடிய போராட்டம் ....
உலகறிய செய்த நம் போராட்டம் ....
உலகமே உற்று பார்க்கும் போராட்டம் .....
உயிரை தியாகம் செய்த போராட்டம் ....
உயிரை நீ துறக்கும் வரை மறவாதே ....!!!

தமிழனுக்கு சிறப்பு பண்புண்டு .....
தன்மானத்தை இழக்கமாட்டான் ....
தனிப்பட்ட விலைக்கு போகமாட்டான் ....
தன் உறவுகளை விற்கமாட்டான் ....
தலைவன் நாமத்தை மறக்கமாட்டான் ....!!!

வலிக்குதடா இப்போ இதயம் .....
கயவர்களின் கவர்ச்சிக்கு போதையாவதும் ....
பேதைகளை போதையாக பார்ப்பதும் ....
போக்குவரத்து பாதைக்காய் போராட்டத்தை ....
மறந்ததும் வலிக்குதடா இப்போ இதயம் .....!!!

+
வலிக்கும் கவிதைகள்
ஈழ கவிதை +02

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக