இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 செப்டம்பர், 2017

ஏமாளியாக இருக்கவில்லை....!!!

ஏழையாக இருக்கிறேன்
ஏமாளியாக இருக்கவில்லை....!!!

ஏழ்மையில் வாழ்கிறேன்
எடுப்பார் கைப்பிள்ளையக இருக்கமாடேன்....!!!

மன்னிக்க மனம் அதிகமில்லை
மனம் புண்படுமாறு நடப்பதில்லை....!!!

கற்காதவர் மத்தியில் பேசமாட்டேன்
கற்றவர் மத்தியில் கவனமாக பேசுவேன்...!!!

அறிவாளியாக என்னை கருத மாட்டேன்
அறிவை தேடாமல் இருக்க மாட்டேன்....!!!

எல்லாம் முடியும் என்னால் என்று கூறமாட்டேன்
எதுவும் முடியாது என்று இருக்கமாட்டேன்....!!!

எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு...
என்பதை நிச்சயம் நம்புகிறேன் ..
முடிவு இல்லையென்றால் ......
முடிவில்லையென்று கலங்கமாட்டேன் ..!!!
+
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக