இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 22 நவம்பர், 2013

சிந்தித்தால் சுகம் தான் ....!!!

சிந்தித்தேன் ...
சினமும் அடைந்தேன் ...
சில நேரம் தனிமையிலும் 
சிந்தித்தேன் ....!!!

சிரித்துக்கொண்டு 
சித்திரவதை செய்யும் 
சித்திரவதை கூடம் நீ 
சித்திரவதை சட்டத்தின் கீழ் 
சிறைபிடிக்கனுமுன்னை ...!!!

சித்திரவதையிலும் சுகம் தான் 
சின்ன சின்ன வலிகளும்
சின்னதாய் கண்ணீர் துளியும் 
சில்லறையாய் உன் சண்டையும் 
சிந்தித்தால் சுகம் தான் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக