இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 6 ஜனவரி, 2016

இனியவன் ஹைபுன் 03

டேய் கெதியா வாடா ஸ்கூல் பெல் அடிக்கபோது முதல் பாடம் கணிதமாட ...சேர்
பொல்லாதவர் லேற்றா போனா அடிப்பாற்றா அந்த மனுஷன் பொல்லாதது என்று சொன்ன படி கோபாலும் விமலும் ஓடி வந்தனர் ...ஒருமாதிரி ஸ்கூல் பெல் அடிக்க முதல் வகுப்பறைக்குள் சென்று விட்டனர் .கணித ஆசிரியர் பெரிய தடியோடு வகுப்பிற்குள்
வந்தார் .........

பாசங்களா ....ஹோம் வொர்க் எல்லாம் செய்தாச்சா செய்யாதவன் எழும்பு ...?
யாரும் எழும்பவில்லை அப்படி பயமும் பக்தியும் அவர்மீது ...!!!
விமலுக்கு கிட்டே வந்து நின்றார் அவனின் உடல் நடுங்கியதை பார்த்து ஏண்டா விமல்
நடுங்கிறாய் ...? ஹோம் வொர்க் செய்யல்லயா ...? இல்லைசார் செய்திட்டன்
அப்பா ஏண்டா நடுங்க்கிற ...? கோபால் சொன்னான் சார் அவன் காலை சாப்பிடேள்ள
அவங்க அப்பாவுக்கு சுகமில்லை வேலைக்கு போக இல்ல அதால சமைக்கவில்லை ..
என்று சொல்ல ..வாடா என்று அவனை கூட்டி சென்று தான் அறையில் உள்ள பாக்கில்
தான் கொண்டுவந்த சாப்பாட்டை கொடுத்தார் ...விமல் தயக்கத்துடன் சாப்பிட அவன் தலையை தடவி தனது கடந்த காலத்தை நினைத்து பார்த்தார் .....

கடினமான மனிதர்கள் மத்தியில் தான் இரக்கமும் அதிகம் .....!!!

கண்டிப்பில் தந்தை
அரவணைப்பில் தாய்
ஆசான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக