இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 டிசம்பர், 2020

தமிழ் அகராதி சொல் கவிதை

 கோமுற்றவரே..... 

கோ முறைதவறாமல் ஆட்சி செய்வீர்.... 

கோபம் கொண்டு மக்கள் எழுந்தால்.... 

கோமணத்தோடு ஓடுவீர்..... !!!


கோமகனே.... 

கோத்துக் கொடுப்பவன் அருகில் இருப்பான்..... 

கோடரி காம்புகளும் இருக்கும்.... 

கோட்பாட்டை கூறி... 

கோட்டையை கவிழ்க்க துடிப்பார்..... !!!


கோகயம் போல் இதயத்துடன்..... 

கோ மகள் போல் சாந்தத்துடன்..... 

கோடரம் போல் வேகத்துடன்..... 

கோணாய் போல் புத்தியுடன்..... 

கோ மகனே ஆட்சி செய்...... !!!

@

கவிப்புயல் இனியவன்

தமிழ் அகராதி சொல் கவிதை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக