இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 15 நவம்பர், 2013

காதலும் கண்ணாடியும்

ஏய் கண்ணாடியே ...!!!

நான் சிரிக்கும் போது
சிரிக்க கற்று தந்தாய் ....!!!

நான் அழும்போது
அழுவதற்கு கற்று தந்தாய் ...!!!

நான் அலங்கரித்த போது
அலங்காரத்தை காட்டினாய் ....!!!

இப்போ உன் நிலையும்
என் நிலையும் ஒன்றுதான்  ...!!!

உன் மீது கல் பட்டு உடைந்து
விட்டாய் -நான்
காதல்பட்டு உடைந்து விட்டேன் ...!!!

உன் துகளால் காலில் இரத்தம்
வடிகிறது -என் துகளால்
இதயத்தில் இரத்தம் வருகிறது ...!!!

காதலும் கண்ணாடியும்
ஒன்றுதான் இருக்கும் வரை
கவர்ச்சி - இல்லாமல் போகும்
தூக்கி வீசப்படும் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக