இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 13 நவம்பர், 2013

மூச்சாய் மூன்று வரி

உன்னோடு வாழ்ந்த காலம் வசந்த காலம் 
உன்னை பிரிந்தபோது இலை உதிர் காலம் 
உயிரோடு இருந்தாலும் சமாதியில் வாழ்கிறேன் ..!!!

******************
சிறு காயத்தால் கதறியவன் 
பெரு காயத்தால் மௌனமானேன் 
காதல் என்பதால் பொறுமையோ ...?
************** 

கண்ணால் பேசினால் காதல் என்கிறார்கள் 
வாயால் பேசினால் என்னை லூசு என்கிறாய் 
நீயோ பேசாமலே இருந்து கொல்லுகிறாய் ....!!!

***************************

நீ எப்படியும் என்னை வேதனை படுத்து 
உனக்கு புரியவில்லை இதயத்தில் நீ 
உன்னையே நீ வேதனைப்படுத்தாதே....!!

***********
எதற்காக என்னை காதலித்தாய் 
எதற்காக என்னை பிரிந்தாய் 
இன்றுவரை அறியாமல் ஏக்கத்துடன் .....?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக