இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 3 செப்டம்பர், 2014

கரம் பிடிப்பான் நிச்சயம் ...!!!

கரம் பிடிப்பான் நிச்சயம் ...!!!

என்னவனையும் ..
என்னையும் பற்றியே 
ஊரார் பேசுகிறார்கள் ..
அதுவும் ஒருவகையில் 
நன்மைதான் .....!!!

ஊரார் பேசிவிட்டார்கள் 
ஊர் முழுதும் பரவிவிட்டது 
ஊரறிய என்னவன் என்னை 
கரம் பிடிப்பான் நிச்சயம் ...!!!

திருக்குறள் : 1150
+
அலரறிவுறுத்தல் 
+
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்கும்இவ் வூர். 

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 70

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக