இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 8 செப்டம்பர், 2014

நீ இல்லாத ஊரில் வாழ்வதா ..?

நீ இல்லாத  ஊரில் வாழ்வதா ..? 

உற்றார் இல்லாத ஊரிலும் ....
உறவுகள் இல்லாத இடத்திலும் ...
வாழ்வதை விட துன்பம் ....
ஏதுண்டு என்னவனே .....?

என் இனியவனே ...
அதைவிட கொடுமை ....
நீ இல்லாத இந்த ஊரில் 
வாழ்வதா ..? வாழ்வின் 
உயிர் பிரியும் கொடுமைக்கு 
சமனல்லவா இக் கொடுமை ....!!!


திருக்குறள் : 1158
+
பிரிவாற்றாமை
+
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும் 
இன்னாது இனியார்ப் பிரிவு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 78

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக