இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 11 செப்டம்பர், 2014

நீ இருக்கும் தூரம் வரை ....!!!

நீ இருக்கும் தூரம் வரை ....!!!

என்னவனே ..
நீ இருக்கும் தூரம் வரை 
என் எண்ணங்களும் 
நீண்டு கொண்டே செல்கிறது ....!!!

எண்ணங்கள் நீண்ட 
தூரம் போல் -என் 
கண்கள் நீ இருக்கும் 
இடத்தை சென்றிருந்தால் 
கண்கள் கண்ணீர் 
வெள்ளத்தில் நீந்தாதடா ....!!!

திருக்குறள் : 1170
+
படர்மெலிந்திரங்கல் 
+
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் 
நீந்தல மன்னோஎன் கண்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 90

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக