இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 30 மார்ச், 2014

உனக்காக துடித்துக் கொண்டு இருக்க...!!

எப்போதும் உன்னை பார்க்க...
வேண்டும் என்று...... ???

இறைவனிடம் கேட்டேன்...!

விழியாக மாறி விடு என்றார் ...!!!
உறங்கும் போது பார்க்க முடியாதே
என்று உதறிவிட்டேன்..!!

கண்களாகச் சொன்னார்...

கலங்கும் போது உன்னை
பார்க்க முடியாதே என்று
தட்டி கழித்து விட்டேன் ....!!!

உன் உயிராகச் சொன்னார்...

பிரிந்து விட்டால் இறந்து விடுவாய்
என்று உதறி தள்ளி விட்டேன் ...!!!

பின்பு தான்..

உன் இதயமானேன்...
என்றும் உனக்காக
துடித்துக் கொண்டு இருக்க...!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக