இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 ஏப்ரல், 2015

நன்றாக நடிக்கிறோம்..!!! நல்லவனாக நடிக்கிறோம் ....!!!

பொய் சொல்லவத்தில்லை....
ஆனால் நடந்த தெரிந்த புரிந்த ....
உண்மையை மறைத்திருகிறோம்....
இதை விட கொடுமை பாதி உண்மை....
பேசியிருக்கிறோம் - கொடுமையில்....
கொடுமை பாதி உண்மைபேசுவது...
இதை எல்லாம்செய்து விட்டு
நன்றாக நடிக்கிறோம் .....
நல்லவனாக நடிக்கிறோம் .....!!!

தப்பு என்று தெரிந்து கொண்டு...
தப்பு செய்திருக்கிறோம் ....
மற்றவர்கள் செய்யாத தப்பையா....?
நான் செய்கிறேன் -சமுதாயத்தை
அடமானம் வைத்துதப்பு செய்கிறோம் ....
நன்றாக நடிக்கிறோம் ....
நல்லவனாக நடிக்கிறோம் ....!!!

திட்ட மிட்டு பிறர் காசை
திருடியது இல்லை ஆனால்
வழியில் கிடந்த பணப்பையை
யாரும் உரிமை கோராதபோது
எம் பணமாக்கி செலவு செய்கிறோம்
மனட்சாட்சிக்கு பதில் சொல்கிறோம்
வழியில் கிடந்த காசு பொது சொத்து
யாரும் பயன்படுத்தலாம் என்று
நமக்கு நாமே நியாயம் சொல்கிறோம் ...
நன்றாக நடிக்கிறோம் .....
நல்லவனாக நடிக்கிறோம் ....!!!

ஊன் உண்ணாதே களவெடுக்காதே...
சிறுவயதில் இருந்து கற்றுகொடுக்கும்....
பாடம் -  மாமிசம் உண்போம்....
பசு கன்றின் பாலை களவெடுத்து....
குடிப்போம் - கேட்டால் சொல்வோம்....
அவையெல்லாம் எமக்காக
படைக்கபட்டவை - எமக்கே உரியவை
வியாக்கியானம் சொல்வோம்
நன்றாக நடிக்கிறோம் .....
நல்லவனாக நடிக்கிறோம் ....!!!

பிறர் மனம் புண் படும் படி....
பேசமாட்டோம் - அவர் .....
இல்லாத தருணத்தில்....
பேசாமல் இருக்க மாட்டோம்....
தர்மத்தையும் நியாயத்தையும்....
பேசுவோம் - கோயிலில் தர்மகத்தாவுடம்
வீண்சண்டை போடுவோம்
நன்றாக நடிக்கிறோம் ....
நல்லவனாக நடிக்கிறோம் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக