இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 7 செப்டம்பர், 2016

இவை எனக்கு சிறந்தவை

பிறந்த நாட்டில் ....
பிறந்த ஊரில் ....
ஒருபிடி மண் தான் ....
எனக்கு ....
பொன் விளையும் பூமி .....!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -01

---
பேசும் மொழிகளில் ....
எந்த மொழியில் ....
கலப்படம் இல்லையோ ....
அந்த மொழி ....
எனக்கு தாய் மொழி ..........!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -02

&

பேசும் போது எவரின்.....
மனம் புண்படவில்லையோ ......
எந்த சொல் மனதை ......
காயப்படுத்தவில்லையோ ......
அந்த மொழியே எனக்கு .....
செம்மொழி ..............!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -03

&

பேசிய வார்த்தைகளால் .....
கிடைத்த புகழைவிட.....
பேசாமல் விட வார்த்தைகளால் .....
நான் பெற்ற இன்பமும் .....
நன்மையும் எனக்கு .....
நோபல் பரிசு ................!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -04

&

நாடார்த்திய விழாக்களில் ......
உறவுகள் நட்புகள் .......
முகம் சுழிக்காமல்......
நாடார்த்திய விழாவே .......
எனக்கு .......
பொன் விழா .........!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -05

&

பாடிய பாடல்களில் ......
இசையமைக்காமல் .....
பாடிய பாடல் .....
அம்மா இங்கே வா வா ....
ஆசை முத்தம் தா தா ......
என்ற பாடல் தான் ......
எனக்கு ......
தேசிய விருது பாடல் ....!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -06

&

என் சராசரி அறிவை .....
சாதனையாளர் கற்கும் ....
கூடத்தில் என்னையும் .....
கற்பிக்கவைத்து .....
என்னை இன்று ஒரு .....
சாதனையாளனாக்கிய .....
என் ஆசானே எனக்கு ......
முழு முதல் கடவுள் .....!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -07

&

பசிக்கும் குழந்தையின் .....
அழுகுரல் கேட்க்காமலும் .....
கை நீட்டி பசிக்காக .....
உதவி கேட்காத ...
முதியவரையும் .......
தெருவில் காணாத நாள் ....
எனக்கு .....
சொர்க்கத்தில் தூங்கிய நாள் .....!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -08

&

எனக்கு வயது பத்து .....
என் தம்பிக்கு வயது எட்டு .....
தம்பியை அடித்த அவன் ....
நண்பனை நான் அடித்தேன் ....
அந்த நாள் நான் ஏதோ....
மாவீரன் போல் நினைத்த ....
நாள் - எனக்கு மனதில் ...
மல்யுத்த வீரன் நினைப்பு ......!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -09

&

நாற்பது பேர் கொண்ட .....
வகுப்பறையில் .....
முதல் மாணவனாய் வந்து ....
பரிசுபெற்று மேடையை ....
விட்டு இறங்கியபோது ....
நான் நடந்த நடை தான் 
எனக்கு ......
ராஜ நடை .........!!!

&
கவிப்புயல் இனியவன் 
இவை எனக்கு சிறந்தவை -10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக