இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 30 ஜூலை, 2015

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

விழிப்பாக இருந்தால் நினைவால் துடிக்கிறேன் ...
விழிமூடி தூங்கினால் கனவுகளாய் துடிக்கிறேன் ...
என் இதயத்தின் துடிப்பு உன் நினைவுகளின் துடிப்பு ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
 
------
 
காதல் வீட்டில் ஒற்றடையாக இருந்து விடு .....
காதல் வீட்டு முற்றத்தில் குப்பையாக இருந்துவிடு .....
நான் உன்னைப்போல் தூக்கி எறியமாட்டேன் .....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
 
-----
 
முத்துபோன்ற பற்களால் நீ சிரித்துவிட்டாய் .....
முகம் வாடி நிற்கிறது வீட்டு மல்லிகை பூ ....
அழகும் வெண்மையும் பிடிக்கவில்லையாம் ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
 
------
 
அழகால் உன்னை காதலித்தேனா ....?
அழகிய வார்த்தைகளால் காதலித்தேனா ....?
ஏதோ அவஸ்தைபடுவது நானே ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
 
----
 
பள்ளி பருவத்தில் பரீட்சையில் தோற்றேன் .....
பருவ வயதில் காதலில் தோற்றேன் .....
பள்ளி பருவ காதல் வேண்டாம் நண்பர்களே ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக