இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 27 ஜூலை, 2015

தமிழ் விஞ்ஞான தந்தை கலாம் ,,,,,




தமிழினத்தை உலகறிய ..... 
உச்சத்துக்கு கொண்டுசென்ற ..... 
உத்தம மனிதர்களில் ஒருவர் ..... 
மேன்மை தங்கிய தமிழ் .... 
விஞ்ஞான தந்தையே கலாமே ...! 
உங்கள் பங்கும் வற்றாத நதி 
அய்யனே .....!!! 

அடுத்த வேளை உணவுக்கு .... 
அல்லல் பட்டாலும் நம்பிக்கையை .... 
தளராமல் விடாமல் முன் செல் ... 
வெற்றி நிச்சயம் சாதனை நிச்சயம் .... 
வாழ்துகாட்டிய எம் தந்தையே ... 
அய்யனே .....!!! 

எப்போது எதிர்காலம் உங்கள் ... 
கையில் இளைஞர்களே மாணவர்களே .....! 
உச்சாகம் ஊட்டுவதில் உம்மை தாண்டிய .... 
எவரையும் நாம் பார்தத்தில்லை -சான்று ..!!! 
உயிர் பிரியும் வேளையிலும் மாணவர்களின் .... 
அருகிலேயே உயிரையும் விட்டீர்களே ....!!! 

அய்யனே ..... 
நீங்ககள் விதையை ஊன்றிவிட்டு .... 
சென்றுள்ளீர்கள் - நிச்சயம் ... 
மரமாகும்... தோப்பாகும் ...வனமாகும் ....!!! 
இருபத்தொராம் நூற்றாண்டின் ..... 
விஞ்ஞானத்தின் தந்தை மட்டுமல்ல .... 
இளைனர்களின் கனவு தந்தையும் .... 
நீங்கள் தானே அய்யனே .....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக