இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 31 ஆகஸ்ட், 2013

காதலை காதலிக்கிறேன் 03

உங்களை எங்கேயோ பார்த்ததுபோல் இருக்கிறது .
என்று இதுவரை கண்டிராத பேசாத நபர் ஒருவரை 
பார்த்து சொல்கிறோம் . காதல் கவிதைகளும் இதுபோல்தான். நான் உனக்காக எழுதிய கவிதையை 
உன் தோழி பார்த்துவிட்டு தனக்கு எழுதியதுபோலும் 
தான் இப்படி கவிதையை பார்த்ததுபோலும் கூறுகிறாள் என்கிறாய் ...!!! காதல் எல்லோர் மத்தியிலும் இருப்பதால் அப்படிதான் தோன்றும் தெரியும் ....!!!

**********************************************

உன்னை காதலிக்க ஆசைப்பட்டதை ...
காட்டிலும் ஆயத்தப்படுத்தினேன் ...
என்பதில் தான் சுகம் அதிகம் ...!!!

என் வீட்டுக்கண்ணாடியே 
என்னை காதலிக்க 
தொடங்கி விட்டது ....!!!

காதல் எண்ணம் எப்போது 
தோன்றுகிறதோ அப்போதுதான் 
ஒரு மனிதன் பூரணமடைகிறான் 
வாசித்துபார் பூரணமடையாய் 
என்பதை போல் ...
காதலித்துப்பார் பூரணமடைவாய் ...!!!