இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

உள்ளத்தால் உருவான காதல்

உறவுகளை மறந்தேன்  
உணர்வுகளை துறந்தேன் 
உடமைகளை இழந்தேன் 
உண்மைகளை மறைத்தேன் 
உலகை நேசித்தேன் 
உள்ளத்தை விரும்பினேன் 
உயிராக மதித்தேன் 
உத்தமனாக இருந்தேன் 
உன்னையே நினைத்தேன்
உள்ளதெல்லாம் சொன்னேன் 
உருகியே காதலித்தேன் 
உன் உண்மையான அன்பை 
உணர்வோடு எதிர்பார்த்தேன் 
உயிரே ஏன் என்னை வெறுத்தாய் 
உண்மையை சொல் 
உனக்கு நான் செய்த வலிதான் என்ன ...?
உள்ளம் மட்டுமல்ல 
உயிரும் வலிக்கிறது 
உன் பிரிவை ஏற்க மறுக்கிறது மனம் 
உண்மையொன்றை சொல்கிறேன் 
உனக்கு இனி என்னைப்போல் ஒருவன் 
உன் உயிர் இருக்கும் வரை கிடைக்காது 
உன்னதமான என் காதல் 
உள்ளத்தால் உருவான காதல் 
உலகம் இருக்கும் வரை தொடரும் .....!!!