இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

என்ன உலகமடா



வெள்ளை வேட்டி கட்டி ..
கழுத்தில் சங்கிலி போட்டு ...
சட்டை பைக்குள் -பணம்
தெரியும் படி வைத்து ....
போகிறவரை -எல்லோரும்
கும்பிடுறாங்க ..சாமி
என்கிறாங்க ...!!!

ஞானத்தில் பழுத்து ....
அதிகமாக பேசாமல் ...
ஊத்தை துணியுடன் ...
ஞான பார்வையுடன் ...
என் அருகில் ஒருவர் ....
நிற்கிறார் -அவர் கேட்காமல்...
காசை போடுகிறார்கள் ...
பிச்சையாக ...!!!

என்ன உலகமடா ...
புறத்தோற்றத்தை...
பார்த்து எவ்வளவு ....
காலம் தான் ஏமாறும்....
இந்த உலகம் ...!!!

^
வாழ்க்கை கவிதை
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக