இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 7 ஜூலை, 2016

தேர் திருவிழா

நினைத்து பார்க்கிறேன்

கோயில் திருவிழாவை
பத்து நாள் திருவிழாவில்
படாத பாடு பட்டத்தை ...!!!

முதல் நாள் திருவிழாவிற்கு
குளித்து திருநீறணிந்து
பக்திப்பழமாய் சென்றேன்
பார்ப்பவர்கள்
கண் படுமளவிற்கு....!!!

இரண்டாம் நாள் திருவிழாவில்
நண்பர்களுடன் கோயில் வீதி
முழுவதும் ஓடித்திரிவதே வேலை
பார்ப்பவர்கள் எல்லோரும்
திட்டும் வரை ....!!!

மூன்றாம் நாள் திருவிழாவில்
மூண்டது சண்டை நண்பர்கள்
மத்தியில் - கூட்டத்துக்குள்
மறைந்து விளையாட்டு ....!!!

நாளாம் நாள் திருவிழாவில்
நாலாதிசையும் காரணமில்லாது
அலைந்து திரிவேன் ...!!!
ஐந்தாம் நாள் திருவிழாவில்
சேர்த்துவைத்த காசை
செலவளித்து விட்டு
வெறும் கையோடு இருப்பேன் ...!!!

ஆறாம் நாள் திருவிழாவை
ஆறுதலான நாளாக கருதி
வீட்டிலேயே இருந்து விடுவேன் ...!!!
காத்திருப்பேன்
தேர் திருவிழாவை -அப்பாவின்
ஆசீர் வாதத்துடன் செல்வதற்கு
அப்பாவும் படியளர்ப்பார்
அம்மாவும் படியளப்பா ....!!!

தேர் திருவிழா இறைவனின்
அழித்தல் தொழிற்பாடாம்
அழித்துவிடுவோம்
முன்னர் ஏற்பட்ட
நண்பர் பகையையும்
கொண்டு சென்ற காசையும் ...!!!

காலம் தான் மாறினாலும்
அந்த நினைவுகள் -காலம் காலமாய்
திருவிழா வரும் போது
வந்து கொண்டெ இருக்கிறது ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக