இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 17 மே, 2016

உயிரே உனக்கு மூன்றுவரி

உயிரோடும் மரணத்தோடும்
மாறி மாறி வாழவிரும்புபவர்கள்
காதலித்துக்கொண்டிருங்கள்...!
&
மூன்று வரி கவிதை 01

^
காதல் பூவுக்குள்  தேன்போலவும்  ...
கண்ணுக்குள்  கண்ணீராகவும் ....
இருப்பதால் தான் சுகமும் வலியும்....!!!
&
மூன்று வரி கவிதை 02

^
நினைவுகள் தாங்க முடியாமல் ...
கண் மட்டுமல்ல இதயமும் அழுகிறது ..
இதயத்தில் இருந்த உனக்கு தெரியாதா ...?
&
மூன்று வரி கவிதை  03

^
இறக்கும் நாள் தெரியும் ...
உன்னை மறக்கும் நாளே...
நான் இறக்கும் நாள் ....!!!
&
மூன்று வரி கவிதை 04

^
உருவம் தெரியாத உயிருக்கு ....
உயிர் கொடுத்து பிரசவிப்பது....
உண்மை காதல் .....!!!

&
மூன்று வரி கவிதை 05
கவிப்புயல் இனியவன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக