இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 11 நவம்பர், 2015

நீ என்னில் இல்லாதபோது

நீ நிழல் ...
என்னை விட்டு ...
விலகுவதுமில்லை .....
எப்போதும் என்னோடு ...
இருப்பதுமில்லை ...!!!

கட்டை விரலை ...
இழந்த ஏகலைவன் போல் ...
காதல்  அம்பிருந்தும் ...
எய்ய முடியவில்லை ...!!!

நீ என்னில் இருக்கும் ...
நொடிகளில் நான் இறக்கிறேன்...
நீ என்னில் இல்லாதபோது ...
உயிர்க்கிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 894

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக