இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூலை, 2013

உருவகம்

உருவகம்

மரபுக்கவிதை

உவமையும் பொருளும் ஏதோ ஒரு பகுதி மட்டும் ஒப்புடையனவல்ல; முழுமையும் ஒன்றானவை என்பதாக அமைவது உருவகம் ஆகும். உவமையினும் செறிவும் நெருக்கமும் உடையது உருவகம். ‘சிவபெருமான், வேதமாகிய உணவை வெறுத்து, தேவார மூவர்தம் திருப்பாடல் ஆகிய உணவுக்கு உழலும் செவியுடையவன்’ என்கிறார் சிவப்பிரகாசர்.
வேத உணவு வெறுத்துப் புகழ்மூவர்
ஓதுதமிழ் ஊணுக்கு உழல்செவியான் (திருவெங்கை உலா)
என வரும் கண்ணியில் இக்கருத்து இடம்பெறுகின்றது.

புதுக்கவிதை

புதுக்கவிதைகளிலும் உருவகங்கள் இடம்பெறக் காண்கிறோம். ரோஜாவைப் பாத்திகட்டி, நட்டு, நீர்பாய்ச்சி மலர வைத்தாலும், மலரைப் பறிக்கும்போது வளர்த்தவரையே முள்ளால் கீறி வடுப்படுத்துவதும் உண்டு. தொழிலாளர்களின் நிலைமையை ரோஜாவோடு உருவகப்படுத்துகின்றார் இன்குலாப்.
தொழிற்சாலைப் பாத்திகளில்
வியர்வைநீர் ஊற்றி
இயந்திர ரோஜாக்களை
மலரவைத்தோம்
இருந்தும்
வறுமை முட்கள்
கீறிய வடுக்களே
பாடுபட்டதற்குக் கிடைத்த
பரிசுப் புத்தகங்கள்
என்பதில்,
(1) தொழிற்சாலை - பாத்தி
(2) வியர்வை - நீர்
(3) இயந்திரம் - ரோஜா
(4) வறுமை - முள்
(5) வடுக்கள் - பரிசு நூல்கள்
என உருவகம் அமைகின்றது.
புதுக்கவிதையில் படிமம் என்பதாக உருவக வடிவம் செறிவாக அமைதலைக் காணமுடிகின்றது.

nanri ;kaviaruvi ramesh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக