இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூலை, 2013

பழமொழி:

பழமொழி:
பழமொழிகளை நயமுறக் கையாண்டு கருத்தை விளக்குதலும் உண்டு.
(எ-கா):
கந்தலானாலும் கசக்கிக்கட்டு
கசக்கினான்
கிழிந்து போனது (மலர்வண்ணன்)
என்னும் கவிதையில் தூய்மைக்குச் சொல்லப்பட்ட பழமொழியை, வறுமையைச் சித்திரிக்க எடுத்துக் கொண்டுள்ளார் கவிஞர்.
(எ-கா):
ஐந்தில் வளைப்பதற்கோ
பிஞ்சு முதுகில்
புத்தக மூட்டைகள் (பாட்டாளி)
என்பதில், ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமோ?’ எனப் பணிவுக்குக் கூறப்பட்ட பழமொழி இன்றைய கல்வி முறையை விமரிசிக்கக் கையாளப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக