இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூலை, 2013

உவமை

உவமை

மரபுக்கவிதை

தெரிந்த பொருளைக் கொண்டு, தெரியாத பொருளைப் புரியவைப்பதற்காகஉவமை தோன்றியது. பின்னர் அணிநயத்தின் பொருட்டும் பயன்படுத்தப்படலானது. அணிகளுக்கெல்லாம் தாயாக விளங்குவது உவமையணியே ஆகும். உவமவியலை மட்டும் தொல்காப்பியர் படைத்துள்ளமையும் இதனை உணர்த்தும்.
நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் ; - பூக்குழலாய் ! 
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்
புல்லினும் திண்மைநிலை போம் (நன்னெறி)
எனவரும் சிவப்பிரகாசரின் பாடலை, பிரிந்து சேர்ந்த நட்பின் உறுதிக்குலைவுக்கு, நெல்லின் உமி பிரிந்து சேர்தல் உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

புதுக்கவிதை

புதுக்கவிதைகளிலும் உவமைக்கென்று தனியிடம் உண்டு. ‘கோடை மேகம் சேர்த்து வைத்திருக்கும் மழைத்துளி, ஒரு கருமி, பஞ்சத்தில் காக்கும் பணப்பையின் காசுகள் போன்றது’ என்கிறார் வைரமுத்து.
ஓர் உலோபி
பஞ்சத்தில் காக்கும்
பணப்பையைப் போல்
கோடைமேகம்
என்னும் அக்கவிதையில் கோடைகால மேகமாவது மழையைச் சிந்திவிடுகிறது. கருமி தன் காசுகளைத் தருவதேயில்லை என்னும் கருத்தும் புலனாகின்றது.

nanri ;kaviaruvi Ramesh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக