இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூலை, 2013

சிலேடை

சிலேடை

மரபுக்கவிதை

ஒருவகைச் சொற்றொடர், பலவகைப் பொருள்களைத் தருவதாக அமைவது சிலேடை ஆகும். காளமேகப் புலவர் சிலேடை பாடுவதில் சிறந்து விளங்குகின்றார். அவர் பாடிய பாம்புக்கும் எள்ளுக்குமான சிலேடை வருமாறு :
ஆடிக் குடத்தடையும் ; ஆடும்போ தேஇரையும் ; 
மூடித் திறக்கின் முகம்காட்டும் ; - ஓடிமண்டை 
பற்றின் பரபரென்னும் பாரில்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடுபாம்பு எள்ளெனவே ஓது
இப்பாடலில், 
(1) குடத்தடைதல் - பாம்புக் கூடை ; எண்ணெய்க்குடம் 
(2) இரைதல் - ‘உஸ்’ என்னும் ஓசை ; செக்கு ஓசை 
(3) முகம் காட்டல் - பாம்பு முகம் ; பார்ப்பவர் முகம் 
(4) மண்டை பற்றல்- விடம் தலைக்கேறல் ; தலையில் பரவுதல்
(5) பிண்ணாக்கு - பிளவுபட்ட நாக்கு ; எள்ளுப் பிண்ணாக்கு (பிள்+நாக்கு)
என்பனவாகப் பொருள் அமையும்.

புதுக்கவிதை

சிலேடைகள் புதுக்கவிதையில் அரிதாகவே காணப்படுகின்றன. 
என்னை 
எவரெஸ்டாகப் பார்க்கும் 
இந்த ஊரின் பார்வையில் 
என் வீழ்ச்சி 
மிகப் பெரிய வீழ்ச்சியே 
எனினும் 
இது இயல்பானது 
தடுக்க முடியாதது 
. . . . . . என் வீழ்ச்சி 
நீர்வீழ்ச்சியே
என்னும் மீராவின் கவிதையில் ‘நீர் வீழ்ச்சி - நீர் மேலிருந்து கீழ்விழுதல்; அருவி’ எனப் பொருளமைந்தது. வீழ்தல் நீருக்கு இயல்பானது தானே !

nanri ;kaviaruvi ramesh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக