இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூலை, 2013

தொன்மம்

தொன்மம்

மரபுக்கவிதை 

புராண இதிகாச வரலாறுகளை உடன்பாட்டு நிலையிலோ எதிர்மறைநிலையிலோ, உள்ளவாறோ மாற்றியோ எடுத்துரைப்பது தொன்மம்ஆகும். 
மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல்இனி(து) ஏனையவர் 
பேசுற்ற இன்சொல் பிறிதென்க - ஈசற்கு 
நல்லோன் எறிசிலையோ, நன்னுதால் ! ஒண்கருப்பு 
வில்லோன் மலரோ விருப்பு (நன்னெறி)
என்னும் பாடலில், சாக்கிய நாயனார் சிவலிங்கத்தின்மீது வழிபடும் நோக்கத்தோடு கல் எறிந்தது விருப்பத்திற்குரியதாயிற்று. 'மன்மதன் மலரம்புகளை வீசினான் எனினும் சிவபெருமானின் தவத்தைக் கலைக்க வீசப்பட்டதாதலின் வெறுப்புக்குரியதாயிற்று’ எனப் புராண வரலாற்று நிகழ்வுகள் சுட்டப் பெறுகின்றன.

புதுக்கவிதை

தொன்மக் குறியீடு என்பதாக இது புதுக்கவிதையில் சுட்டப்பெறுகின்றது. இன்றைய அரசியல் உலகில் சுயநலம் கருதி அடிக்கடி கட்சித்தாவல் செய்யும் அரசியல்வாதிகளின் செயல்களை, 
தாயங்களில் - சகுனி 
வெற்றிச் சரிதத்தின் அத்தியாயங்கள் 
வளர்க்க வளர்க்க . . . 
மாயக் கண்ணன் 
கட்சி மாறுகிறான்
எனப் பாரதக்கதையை மாற்றியமைத்துள்ளார் ஈரோடு தமிழன்பன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக