அங்கதம்
மரபுக்கவிதை
அங்கதம் என்பது நகைச்சுவையும், புலமை நுட்பமும், திறனாய்வு நோக்கும் கொண்ட ஓர் இலக்கிய உத்தி. இது மக்கட் சமுதாய மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. தீங்கையும், அறிவின்மையையும் கண்டனம் செய்வது; மனிதகுலக் குற்றம் கண்டு சினம்கொண்டு சிரிப்பது. தொல்காப்பியரும் அங்கதம் குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தொடும் சொல்லொடும் புணரா தாகிப்
பொருட்புறத் ததுவே குறிப்புமொழி என்ப
என்பது தொல்காப்பியம்.
ஒளவையார், தொண்டைமானின் படைக்கலக் கொட்டிலில் புதியனவாகவும், அதியமானின் படைக்கலக் கொட்டிலில் வடிவம் சிதைந்து பழையனவாகவும் படைக்கலன்கள் இருந்தனவாகத் தூது சென்ற இடத்தில் தொண்டைமானிடம் தெரிவிக்கிறார்.
இவ்வே
பீலி யணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய்யணிந்து,
கடியுடை வியல்நக ரவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதோ ! . . .
எனவரும் அப்புறநானூற்றுப் பாடல், ‘அதியமான் பல போர்கள் கண்ட திறமுடையவன், தொண்டைமானாகிய நீ போர்களைக் காணாதவன், அவனை நீ வெல்வது அரிது என்பதான பொருளை அங்கதமாகக் கொண்டிருக்கின்றது.
புதுக்கவிதை
அங்கதம் புதுக்கவிதையில் சிறப்புறப் பயன்படுத்தப் பெறுகின்றது. ஈரோடு தமிழன்பன், அரசியல்வாதிகள் மனிதநேயமின்றி இருத்தலைக் குறித்துக் கூறும் கவிதை இத்தகையது.
எங்கள் ஊரில்
ஒருவர் ஊராட்சி உறுப்பினரானார்
ஒன்றியத் தலைவரானார்
சட்டமன்ற
உறுப்பினரானார்
அமைச்சரானார்
அயல்நாட்டுத் தூதரானார்
இறுதிவரை ஒருமுறைகூட
மனிதராகாமலே
மரணமானார்
என்பது அக்கவிதை.
nanri kaviaruvi Ramesh
மரபுக்கவிதை
அங்கதம் என்பது நகைச்சுவையும், புலமை நுட்பமும், திறனாய்வு நோக்கும் கொண்ட ஓர் இலக்கிய உத்தி. இது மக்கட் சமுதாய மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. தீங்கையும், அறிவின்மையையும் கண்டனம் செய்வது; மனிதகுலக் குற்றம் கண்டு சினம்கொண்டு சிரிப்பது. தொல்காப்பியரும் அங்கதம் குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தொடும் சொல்லொடும் புணரா தாகிப்
பொருட்புறத் ததுவே குறிப்புமொழி என்ப
என்பது தொல்காப்பியம்.
ஒளவையார், தொண்டைமானின் படைக்கலக் கொட்டிலில் புதியனவாகவும், அதியமானின் படைக்கலக் கொட்டிலில் வடிவம் சிதைந்து பழையனவாகவும் படைக்கலன்கள் இருந்தனவாகத் தூது சென்ற இடத்தில் தொண்டைமானிடம் தெரிவிக்கிறார்.
இவ்வே
பீலி யணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய்யணிந்து,
கடியுடை வியல்நக ரவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதோ ! . . .
எனவரும் அப்புறநானூற்றுப் பாடல், ‘அதியமான் பல போர்கள் கண்ட திறமுடையவன், தொண்டைமானாகிய நீ போர்களைக் காணாதவன், அவனை நீ வெல்வது அரிது என்பதான பொருளை அங்கதமாகக் கொண்டிருக்கின்றது.
புதுக்கவிதை
அங்கதம் புதுக்கவிதையில் சிறப்புறப் பயன்படுத்தப் பெறுகின்றது. ஈரோடு தமிழன்பன், அரசியல்வாதிகள் மனிதநேயமின்றி இருத்தலைக் குறித்துக் கூறும் கவிதை இத்தகையது.
எங்கள் ஊரில்
ஒருவர் ஊராட்சி உறுப்பினரானார்
ஒன்றியத் தலைவரானார்
சட்டமன்ற
உறுப்பினரானார்
அமைச்சரானார்
அயல்நாட்டுத் தூதரானார்
இறுதிவரை ஒருமுறைகூட
மனிதராகாமலே
மரணமானார்
என்பது அக்கவிதை.
nanri kaviaruvi Ramesh
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக