இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூலை, 2013

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

மரபுக்கவிதை

வாழ்க்கையில் எந்நிலையிலும் சோர்ந்து போகக் கூடாது. தடைகள் பல வரினும் போராடி வென்று மேலேற வேண்டும். ‘இதுதான் நம் தலைவிதி’ என்று சோம்பேறித்தனத்தை வளர்த்துக் கொள்ளலாகாது.
தேடிச் சோறுநிதம் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரைஎனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேன் என்றுநினைத் தாயோ?
எனச் சக்தியிடமே முறையிடுகின்றார் பாரதியார்.

புதுக்கவிதை

தளராத உள்ளத்தோடு துணிந்து செல்ல வழிகாட்டும் புதுக்கவிதைகள் பல வந்துகொண்டிருக்கின்றன.
நம்பிக்கையை
நெஞ்சில் இருத்தி
நடந்து பாருங்கள்
வசந்தம்
கைகோர்த்துக்
கூட வரும்
என்பது க.வை. பழனிச்சாமி என்பவரின் கவிதை.

nanri ;kaviaruvi Ramesh 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக