இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 அக்டோபர், 2014

பிரிவு கொடுமையானதே ...

பிரிவு கொடுமையானதே ...

என்னவனின் பிரிவு ..
கொடுமையானதே ...
அதனால் வந்த பசப்பும் ...
கொடுமையானதே ....!!!

என்னவன் ....
தந்த பிரிவின் வலியை...
என் உடல் முழுதும் 
படர்கிறது - நினைத்தால்
சுமைகூட சுகம் தான் ...!!!

திருக்குறள் : 1182
+
பசப்புறுபருவரல்
+
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் 
மேனிமேல் ஊரும் பசப்பு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
கவிதை எண் - 102

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக