இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

என்னவளின் அழகில்

என்னவளின் அழகில் 
ஏய் நட்சத்திரங்களே ...
ஏன் குழப்பம் அடைகிறீர்கள் 
என்னவளின் முகத்துக்கும் 
முழு நிலாவுக்கும் என்ன 
வேறுபாடு கண்டீர்கள் ..?

தேய்ந்து வளரும் மதி 
போல் என்னவளின் 
அழகும் வளந்து கொண்டே 
செல்கிறது நிலவை ஒத்த 
என்னவளின் அழகில் 
என்ன குழப்பம் 
விண் மீன்களே ..?


திருக்குறள் : 1117

நலம்புனைந்துரைத்தல்

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல 
மறுவுண்டோ மாதர் முகத்து.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 37

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக