இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 20 ஆகஸ்ட், 2014

நீ மறைந்து விடுவாயோ

நீ மறைந்து விடுவாயோ 

என் 
கண்ணுக்குள் இருக்கும் 
கண்ணாலனே .....!!!
கண் இமைக்க பயப்பிடுவது 
என் மனம் ....!!!

என் 
வில் கொண்டகண்ணுக்கு
மை தீட்டவும் தயங்குகிறேன் 
மை தீட்டும் தருணத்தில் 
என்னவனே நீ மறைந்து 
விடுவாயோ என்று மனம் 
வருந்துவதால் - மை 
தீட்ட மாட்டேன் என்னவனே...!!! 


திருக்குறள் : 1127
+
காதற்சிறப்புரைத்தல்
+
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து. 

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 47

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக