இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 20 ஆகஸ்ட், 2014

ஓர் உயிராய் வாழ்கிறோம் ...!!!

ஓர் உயிராய் வாழ்கிறோம் ...!!!

எனக்குள் அவரும் 
அவருக்குள் நானும் 
இரு உடலாக இருந்தும் 
ஓர் உயிராய் வாழ்கிறோம் ...!!!

உடல் தான் வேறு
உயிர் ஒன்றுதானே உயிரே 
உயிருக்கு உயிராய் இருக்கும் 
எம்மை புரியாத இவர்கள் 
பிரிந்து இருக்கும் உடலை 
பார்த்து பிரிந்து வாழ்கிறோம் 
என்கிறார்களே ....!!!

திருக்குறள் : 1130
+
காதற்சிறப்புரைத்தல்
+
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும் இவ் வூர். 

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 50

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக