இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 60

என் காதல் பரவி கிடக்குறது ...!!!

என் காதல்
யாரும் அறியாதவாறு
என் மன அடக்கத்தால் ..
யாருக்கும் தெரியவில்லை
என்றிருந்தேன் ....!!!
என் காதல்
தெருத்தெருவாய்
அம்பலும் அலருமாய்
சுற்றிச் சுற்றி வருகிறது....!
காதலை காமத்தை
நீண்டகாலம் மறைத்து
வைத்திருக்க முடியாதோ ...?

திருக்குறள் : 1139
+
நாணுத்துறவுரைத்தல்
+
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 59
****
 
காதல் வலி புரியாதவர்கள் ...!!!

நான் படும் வேதனை
படாதபடும் துன்பத்தை
என்னை பார்க்கும் மூடர்கள்
சிரிக்கிறார்கள் .....!!!
நன்றாக சிரிக்கட்டும்
காதலின் வலி என்ன
என்பதை அனுபவிக்காத
மூடர்கள் தான் சிரிப்பார்கள்
காதலித்துப்பார் வலிபுரியும் ...!!!

திருக்குறள் : 1140
+
நாணுத்துறவுரைத்தல்
+
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 60

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக