இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 20 ஆகஸ்ட், 2014

இரக்கமற்றவன் என்கிறார்களே ...!!!

இரக்கமற்றவன் என்கிறார்களே ...!!!

கண்ணுக்குள் கரு விழியாய் 
இருப்பவன் நீயடா ...!!!
கண் இமைக்க விடாமல் 
கலக்கம் செய்பவன் நீ 

கண் இமைத்தால் நீ 
மறைந்து விடுவாயோ ...
என்ற ஏக்கத்தால் கண் 
மூடாது கண் இமைக்காமல் ...
உன்னோடு நானிருக்கிறேன் ...!
நம் காதலை புரியாத... 
என் அயலவர் உன்னை 
இரக்கமற்றவன் என்கிறார்களே ...!!!


திருக்குறள் : 1129
+
காதற்சிறப்புரைத்தல்
+
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும் இவ் வூர். 

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 49

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக