இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

ஏதேதோ பேசுகிறார்கள் ..

ஏதேதோ பேசுகிறார்கள் ..

பூவிலும் மென்மையான 
என்னவளை காணத்துடிக்கும் 
என் கண்ணும் உயிரும் 
இன்னும் நான் அவளை 
நெருங்கவில்லை .....!!!

என்னவளை ...
சந்திப்பேனா ..? அடைவேனா..?
என்பதை அறியாத என் அயலவர் 
ஏதேதோ பேசுகிறார்கள் ..
இதுவும் நம் காதலுக்கு ....
ஒரு உரம்தான் உயிரே ....!!!

திருக்குறள் : 1142
+
அலரறிவுறுத்தல் 
+
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர். 

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 62

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக