இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

கல்லூரி காதல் கவிதைகள்




கல்லூரி 
வாசலில் காத்திருக்கிறேன் .
மோசக்காரி கண்ணால்
வலை வீசிவிட்டாள் 
ஒரு நொடியில் ...!!

சிக்கி இருக்கும் என்னை 
மீட்க வருவாளா ...?
சிதைந்துபோய் இருக்கும் 
இதயத்தை 
சாந்த படுத்துவாளா ..?

வகுப்பறையில் இருக்கிறேன் 
பார்வை முழுதும் 
அவள் திசையில் - விரிவுரை 
நடக்கிறது -என் இதயமோ 
அவளை நோக்கியே விரிகிறது ...!!!

ஒன்றும் நடக்காததுபோல் 
எழுந்து செல்கிறாள் 
ஒன்றைக்கூட நினைவு 
வைக்காமல் அவள் நினைவில் 
செல்கிறேன் ....!!!

கல்லூரி வாசலில்
அவள் வருகைக்காக 
காத்திருக்கிறேன் -வந்தாள்
அருகாலே சென்றாள் 
தூரசென்று கையசைத்து 
சிரித்தாள் - என்னை விட்டு 
வானத்தில் பறந்தது என் 
இதயம் .....!!!



கே இனியவன் 
கல்லூரி காதல் கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக