இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

என்னை பாடாய் படுத்துகிறது ....!!!

என்னை பாடாய் படுத்துகிறது ....!!!

மெல்லிடையாளே ...
பூவிதழ் கொண்டவளே ...
உன் எண்ணங்கள் என்னை 
பாடாய் படுத்துகிறது ....!!!

என் கண்கள் உறக்கத்தை 
தொலைத்து விட்டன 
தூங்கிய என் கண்களை 
நானறியேன் ...!!!
என் வெட்கத்தைவிட்டு 
நள்ளிரவு - மடலேற 
நினைத்துள்ளேன் ...!!!

திருக்குறள் : 1136
+
நாணுத்துறவுரைத்தல் 
+
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற 
படல்ஒல்லா பேதைக்கென் கண்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 56

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக