இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 20 ஆகஸ்ட், 2014

என்னை புரிந்து கொண்டவன்

என் 
கண்ணுக்குள் இருப்பவனே 
கண்ணாய் இருப்பவனே
என்னை .....
விட்டு எப்படி விலகுவாய் ,,?

நான் ஒரு நொடி 
கண் மூடி இமைத்தாலும் 
என் கண்ணுள் இருப்பவன் 
வருத்தபடமாட்டான் ...
பிற ஆண்களை போல் இல்லை 
என்னவன் ..!!!
என்னை புரிந்துகொண்ட நுண் 
அறிவு மிக்கவன் என் ஆடவன் ...!!!



திருக்குறள் : 1126
+
காதற்சிறப்புரைத்தல்
+
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர். 

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 46

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக