இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

கல்லூரி வாசலின் வெளியே...!!!

அவள் பேசிக்கொள்ளடும்
என் இதயம் சொல்கிறது
அவன் பேசட்டுமே -அவள்
இதயம் சொல்கிறது ....!!!

இவருடைய இதயமும்
ஒரு விசும்பு தனத்தில்
நடனமாடுகிறன
அன்றைய கல்லூரி நேரம்
முடிவுக்கு வரும் வரை ....!!!

உனக்கு அவ்வளவு திமிரா ..?
அவள் இதயம் என்னிடம் கேட்க
உனக்கு மட்டும் இல்லையோ
என் இதயம் பதில் கேள்வி
கேட்டது ......!!!

இருவரின் முகமும்
கரும் புகைபோல் கறுத்து
கடும் நெருப்பில் வெந்த
இரும்பாய் மாறியது ...!!!

இதயங்கள்
இரண்டும் கைகோர்த்து  சென்றன
உடல்கள் மட்டும் இரு திசையில்
இறந்த உடல்போல் சென்றன
கல்லூரி வாசலின் வெளியே...!!! 



கே இனியவன்
கல்லூரி காதல் கவிதைகள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக