இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

பரகசியமாகப்போகுதே ....!!!

பரகசியமாகப்போகுதே ....!!!

என்னவள்
நாணம் நிறைந்தவள்
இரக்கம் நிறைந்தவள்
அடக்கம் உடையவள்
இதையெல்லாம் கடந்து ..
இரக்கம் இல்லாமல்
என்னவளையும் ......!!!
எம் இருவருக்கும்
இருக்கும் உன்னத காதல்
எம்மையும் கடந்து ஊருக்குள்
எல்லோரும் பேசி ...
பரகசியமாகப்போகுதே ....!!!
திருக்குறள் : 1138
+
நாணுத்துறவுரைத்தல்
+
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 58

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக